Monday, March 4, 2013

ஜன்னல்



சமயத்தில்
என் ஜன்னல்
பால்யத்தின் நுழைவு வாயில்

பயணத்தில் மரங்களை
பின்நோக்கி ஓடவைத்தது...

மழைப்பொழுதுகளில் கம்பிகள் தாங்கிய
துளிகள் உடைத்து கழிந்தது பால்யம்...

திருவிழா தொடங்கிவிட்டால்
பிடியைத் தளர்த்தாது
பொழுதுகள் கழியும் வேடிக்கையில்...

என் விரல்பிடித்து
எப்போதும் பிரமிப்புகளை
காட்டியிருக்கிறது
ஜன்னல்

அது அப்படியேதான்
இருக்கிறது
நாம்தான் அதனருகே அமர்வதில்லை

இப்படியே இருந்திருக்கலாம்
எனக்கும் ஜன்னலுக்குமான
உறவு...

என்றோ ஒருநாள் இரவின் பிடியில்
ஜன்னல் கம்பிகள் பிடித்து
தேம்பியழுதது மட்டும்
நடந்திருக்காவிட்டால்...

1 comment:

தங்கள் கருத்தை பதியவும்...