Monday, March 12, 2012

அழகி


உன் கூந்தல் மல்லிகை உணர்த்தியது நீ மதுரையென...
நான் உணர்ந்தேன் உன் விழிகள் - மதுவென...

வர்ணிக்க வார்த்தையில்லை
புருவங்களின் கண்மையைவிட
கருமையான உன் விழிகளை

சூரியனுக்கு சுண்ணாம்பு இடுவது போலத்தான்
சிவந்த உன் உதடுக்கு சாயமிடுவதும்
உன் உதடு சிவக்க சாயம் தேவைதானா?

உன் சிரிப்பையும் அநேகமாக
சத்தமாகவே வெளிப்படுத்துகிறாய்
உனைப்போலவே ஒளிவுமறைவின்றி

வெட்கப்படுவதாய் சிலநேரம்
நீ வெட்கப்படும்போது
வெட்கமும்... வெட்கப்படுகிறது

சிலசமயம் இருளிலும் "அழகி" நீ...

(குறிப்பு: இந்த கவிதைக்கு இரு அர்த்தங்கள் உள்ளன. பொதுவாக படிக்கும் எவருக்கும் இது ஒரு அழகிய பெண்ணை வர்ணிப்பதுபோன்றே இருக்கும். ஆனால் இதன் மற்றொரு அர்த்தம் இது முற்றிலும் ஒரு விலைமகளை பற்றிய வர்ணனை. விலைமகளைப் பொருத்திப்பார்த்து படித்துப்பாருங்கள் உண்மை புரியும். கடைசி வரியான இருளிலும் அழகி நீ என்பதுகூட அவள் ஒரு "அழகி" என்பதை குறிக்கும்)

4 comments:

  1. "சூரியனுக்கு சுண்ணாம்பு இடுவது போலத்தான்.." -நல்ல உவமை :-)))

    ReplyDelete

தங்கள் கருத்தை பதியவும்...